ADDED : மார் 20, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் கோயில் யானை கஸ்துாரி பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பழநி பகுதியில் தனியார் வளர்ப்பு யானையும் உள்ளது.
இவற்றின் உயரம், எடை உள்ளிட்ட அளவீடுகள் குறித்து நேற்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, பழநி வனச்சரகர் கோகுல கண்ணன், மருத்துவ உதவி இயக்குனர் சுரேஷ், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

