sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆத்துாரில் யானைகள் நடமாட்டம்

/

ஆத்துாரில் யானைகள் நடமாட்டம்

ஆத்துாரில் யானைகள் நடமாட்டம்

ஆத்துாரில் யானைகள் நடமாட்டம்


ADDED : டிச 23, 2024 05:28 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் நீர்த்தேக்க பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க பகுதியில் புதர்ச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு, மயில் போன்ற விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இவை, வாழை, சோளம் உள்ளிட்ட சாகுபடியை சேதப்படுத்துவது தொடர்கிறது. நான்கு வாரங்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டத்தால் ஆடுகள், நாய்கள் மாயமானதாக தகவல் பரவியது. சில நாட்களாக நீர்தேக்கம் அருகே மலையடிவார பகுதியில் தனியார் காட்டேஜ்கள் உள்ளன.

இவற்றில் சில இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் யானைகள் நடமாட்டம் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து யானைகள் வரிசையாக இப்பகுதியை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தகவலறிந்த வனத்துறையினர், இப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

விவசாயிகள் இரவு நேரங்களில் நடமாட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தபப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us