sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சாலை அமைப்பதில் ஆக்கிரமிப்பாளர்களால் இடையூறு

/

சாலை அமைப்பதில் ஆக்கிரமிப்பாளர்களால் இடையூறு

சாலை அமைப்பதில் ஆக்கிரமிப்பாளர்களால் இடையூறு

சாலை அமைப்பதில் ஆக்கிரமிப்பாளர்களால் இடையூறு


ADDED : மார் 27, 2025 05:07 AM

Google News

ADDED : மார் 27, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி நகராட்சி 33 வது வார்டு பகுதியில் வெளிநபர்கள் ஆக்கிரமிப்பால் சாலை அமைப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

கிழக்கு பாட்டாளி தெரு, கே.வி ஸ்கூல் ரோடு, சையது ராவுத்தர் ரோடு, இடும்பன் கோயில் இட்டேரி ரோடை உள்ளடக்கிய இந்த வார்டில் பக்தர்களின் வருகை அதிகம் உள்ளதால் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திண்டுக்கல் சாலையை இணைக்கும் இடும்பன் மலை ரோட்டில் சாக்கடை பாலம் அமைக்க இயலாதால் அப்பகுதியினர் சிரமம் அடைகின்றனர்.

கொசுத்தொல்லை


திருமூர்த்தி, வியாபாரி : வார்டு முக்கிய சாலைகளில் சாக்கடை சேதமடைந்து உள்ளது. கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலையில் வார்டு மக்கள் உள்ளனர்.

தேவையாகுது கேமரா


சங்கிலி,சாலையோர வியாபாரி : தெரு நாய் தொல்லை அதிகளவில் உள்ளது .இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை .இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வெளிநபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா பொருத்த வேண்டும்.

அனைத்து நாளிலும் ரேஷன்


ராமாத்தாள்,குடும்பத் தலைவி : பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். ரேஷன் கடைகளில் மாத இறுதி நாட்களில் பொருட்கள் இல்லாமல் அவற்றை வாங்க சிரமம் ஏற்படுகிறது. அனைத்து நாட்களிலும் ரேஷன் கடைகளில் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகற்ற நடவடிக்கை


நடராஜன், கவுன்சிலர்(அ.திமு.க.,) :பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. கொசு மருந்து அடிக்கடி அடிக்கப்படுகிறது. நாய் தொல்லையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரோட்டில் இருந்து இடும்பன் கோயில் செல்லும் ரோடு பகுதியில் சாக்கடை பாலம் , சாலை அமைக்கப்படும். வெளி நபர்கள் கூடாரம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us