sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மதுரை அமலாக்கத்துறை அதிகாரிக்கு7 முறையாக காவல் நீட்டிப்பு

/

மதுரை அமலாக்கத்துறை அதிகாரிக்கு7 முறையாக காவல் நீட்டிப்பு

மதுரை அமலாக்கத்துறை அதிகாரிக்கு7 முறையாக காவல் நீட்டிப்பு

மதுரை அமலாக்கத்துறை அதிகாரிக்கு7 முறையாக காவல் நீட்டிப்பு


ADDED : மார் 07, 2024 02:14 AM

Google News

ADDED : மார் 07, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு 7 வது முறையாக காவல் நீட்டிப்பு செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி 2023 டிச.1ல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி கைது செய்யப்பட்டார்.

6 வது முறையாக காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவருக்கு , ஜாமின் வழங்க கோரி நீதிமன்றத்தில் 2 முறை மனு தாக்கல் செய்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்றுடன் அங்கித்திவாரிக்கு காவல் முடிந்ததால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மதியம் 3:00 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 7வது முறையாக மார்ச் 20 வரை நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்து நீதித்துறை நடுவர் மோகனா உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us