/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதுரை அமலாக்கத்துறை அதிகாரிக்கு 5வது முறையாக காவல் நீட்டிப்பு
/
மதுரை அமலாக்கத்துறை அதிகாரிக்கு 5வது முறையாக காவல் நீட்டிப்பு
மதுரை அமலாக்கத்துறை அதிகாரிக்கு 5வது முறையாக காவல் நீட்டிப்பு
மதுரை அமலாக்கத்துறை அதிகாரிக்கு 5வது முறையாக காவல் நீட்டிப்பு
ADDED : பிப் 08, 2024 02:22 AM
திண்டுக்கல்:லஞ்ச வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு 5வது முறையாக காவல் நீட்டிப்பு செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை, சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கி டிச.1ல் கைது செய்யப்பட்டார். மதுரை சிறையில் உள்ளார். நேற்று அங்கித்திவாரிக்கு நீதிமன்ற காவல் முடிந்தது. அவர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். இதனை விசாரித்த நீதித்துறை நடுவர் மோகனா, 5 வது முறையாக அங்கித்திவாரிக்கு பிப்.21 வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

