ADDED : நவ 27, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர் : கரூர் மாவட்டம் பெரிய மஞ்சுவளியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி 55. இவர் கூம்பூர் அருகே வள்ளிபட்டியில் குத்தகை தோட்டம் போட்டு வருகிறார். இவர் தன் இரண்டு பசு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
அங்குள்ள கிணற்றின் அருகே சென்ற போது ஒரு பசு மாடு கிணற்றின் ஓரம் திடீரென சறுக்கி விழுந்தது. மாட்டை பிடிக்கச் சென்ற பொன்னுச்சாமி கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். வேடசந்தூர் தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டனர். கூம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

