sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கரடி தாக்கி விவசாயி காயம்; உயிரை காத்த வளர்ப்பு நாய்

/

 கரடி தாக்கி விவசாயி காயம்; உயிரை காத்த வளர்ப்பு நாய்

 கரடி தாக்கி விவசாயி காயம்; உயிரை காத்த வளர்ப்பு நாய்

 கரடி தாக்கி விவசாயி காயம்; உயிரை காத்த வளர்ப்பு நாய்


UPDATED : டிச 08, 2025 07:55 AM

ADDED : டிச 08, 2025 05:22 AM

Google News

UPDATED : டிச 08, 2025 07:55 AM ADDED : டிச 08, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: திண்டுக்கல்மாவட்டம் விராலிப்பட்டியில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்த விவசாயியை கரடி தாக்கியதில் காயமடைந்தார். அவர் வளர்ப்பு நாயால் உயிர் தப்பினார்.

விராலிபட்டியைச் சேர்ந்தவர் சேகர் 60. தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளார். நேற்று முன்தினம் நடவு செய்யப்பட்ட சர்க்கரை வள்ளி கிழங்கிற்கு, நேற்று காலை தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது 3 அடி உயரமுள்ள கரடி அவரது தொடையை கவ்வி பிடித்து கீழே தள்ளியது. அந்த நேரத்தில் அவரது வளர்ப்பு நாய் குறைத்து கரடியுடன் சண்டையிட்டு துரத்தியதால் நாயும் காயமடைந்தது. காயமடைந்த சேகர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

அவர் கூறுகையில்'' கடந்த 6 மாதங்களாகவே கரடி நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கூறியும் நடவடிக்கை இல்லை. எனது நாய் இல்லை என்றால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.






      Dinamalar
      Follow us