ADDED : செப் 12, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சி கிராமத்தின் எல்லையோர வருவாய்துறை நிலங்களில் விவசாயம் செய்துவரும் விடுபட்ட விவசாயிகளுக்கு வன உரிமை சட்டப்படி பட்டா கொடுக்க வேண்டும், ஆயக்குடி, கணக்கன்பட்டி, பச்சிள நாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி பகுதி விவசாய நிலங்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஆயக்குடி, வடகவுஞ்சி கிராம மலைத்தோட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டக்குழு உறுப்பினர் செல்லையா தலைமை வகித்தார். சச்சிதானந்தம் எம்.பி., பேசினார். மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் ராமசாமி கலந்து கொண்டனர்.