sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சித்தையன்கோட்டையில் சிறுத்தை நடமாட்டம் நாய்கள், ஆடுகள் மாயமாவதால் அச்சம்

/

சித்தையன்கோட்டையில் சிறுத்தை நடமாட்டம் நாய்கள், ஆடுகள் மாயமாவதால் அச்சம்

சித்தையன்கோட்டையில் சிறுத்தை நடமாட்டம் நாய்கள், ஆடுகள் மாயமாவதால் அச்சம்

சித்தையன்கோட்டையில் சிறுத்தை நடமாட்டம் நாய்கள், ஆடுகள் மாயமாவதால் அச்சம்


ADDED : டிச 10, 2024 06:07 AM

Google News

ADDED : டிச 10, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: நரசிங்கபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள சூழலில் நாய்கள்,ஆடுகள் மாயமாகி வருவதால் சுற்றுப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க பகுதியில் புதர்ச்செடிகள் அடர்ந்துள்ளதால் மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு, மயில் போன்ற விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இவை வாழை, சோளம் உள்ளிட்ட சாகுபடியை சேதப்படுத்துவது தொடர்கிறது.

இது போல் ஆத்துார் நீர்தேக்கம் யொட்டிய மலையடிவார பகுதியில் உள்ளகுடியிருப்புகள், தனியார் காட்டேஜ்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் யானைகள் நடமாட்டமும் பதிவாகி உள்ளது.

சித்தையன்கோட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் சிறுத்தை, செந்நாய் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், நாய்களும் மாயமாகி வருகின்றன.

நரசிங்கபுரம் விவசாயி தங்கப்பாண்டி கூறுகையில், ''கொம்பன்கரடு, கோம்பைக்கரடு பகுதியில் சிறுத்தை தஞ்சமடைந்துள்ளது.

ஆத்துார் இரட்டை புளியமரம், கரடு, புதுப்பட்டி மில், தெப்பக்குளம், நரசிங்கபுரம் வழித்தடத்தில் அடுத்தடுத்து சிறுத்தை வந்து செல்வது வழக்கமாக உள்ளது.

அப்போது பிடிபடும் நாய்கள், ஆடுகளை துாக்கி சென்று விடுகிறது.

நேற்று முன்தினம் அறிவுடயான் கோயில் அருகே 2 நாய்களை தாக்கியுள்ளது'' என்றார்.

கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர் மாலை, இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us