/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் கோயில்களில் திருவிழா
/
திண்டுக்கல் கோயில்களில் திருவிழா
ADDED : ஏப் 11, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் :
- நத்தம் அருகே துவராபதி கிராமத்தில் கருப்புசுவாமி , ஆகாசவீரன்,கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு விழாவையொட்டி நேற்று முன்தினம் ஊரின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக மந்தைக்கு எடுத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது.
பின்னர் கோயிலுக்குள் சென்ற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து நேற்று மாலை கருப்புச்சாமி, ஆகாசவீரன்,கன்னிமார் சுவாமிகள் ,மதிலை சிலைகள் வர்ணக் குடைகளுடன் ஊர்வலமாக இருப்பிடம் போய் சேர்ந்தது.