ADDED : ஜூலை 28, 2025 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : காளியம்மன் கோயில் எதிரே சைக்கிள் கடை குடோனில் வைக்கப்பட்டிருந்த காலி அட்டைப் பெட்டிகளில் திடீரென தீ பிடித்தது.
அட்டைப் பெட்டிகள் என்பதால் தீ வேகமாக பரவியது. இருப்பினும் வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள், தீயை வணிகவளாகத்தில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவாமல் தடுத்தனர்.
இதனால், மெயின் ரோட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விபத்து காரணம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.