ADDED : ஜூன் 18, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: திருச்சி உறையூர் வாத்துக்காரர் தெருவை சேர்ந்தவர் சுதர்சன் 24. நண்பர் கபிலனுடன் திண்டுக்கல் மார்க்கெட்டிலிருந்து மீன் லோடுடன் திருச்சி சென்றார்.
நேற்று அதிகாலை அய்யலுார் தங்கம்மாபட்டி பகுதியில் சென்ற போது நிலை தடுமாறிய வேன் ரோட்டோர விளைநிலத்தில் கவிழ்ந்தது. பெட்டிகளில் இருந்த மீன்கள் சிதறின. வேறு வாகனம் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் உதவியுடன் மீன்கள் திருச்சிக்கு அனுப்பப்பட்டன.