sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குதிரையாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

/

குதிரையாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

குதிரையாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

குதிரையாறு அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை


ADDED : அக் 16, 2024 05:50 AM

Google News

ADDED : அக் 16, 2024 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : தொடர் மழையால் பழநி பகுதியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு ,வரதமாநதி அணை, குதிரையாறு அணை அதிக நீர்வரத்தை பெற்றுள்ளது. இதில் வரதமாநதி அணை சில மாதங்களாக தொடர்ந்து நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பாலாறு -பொருந்தலாறு அணியின் நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணிக்கு 52.13அடியாக ( 65அடி) உயர்ந்துள்ளது. வரத்து 14.33 கன அடி,வெளியேற்றம் 9 கன அடியாக உள்ளது. வரதமாநதி அணையில் நீர்வரத்தும், வெளியேற்றமும் வினாடிக்கு 147 கனஅடியாக உள்ளது. குதிரையாறு அணை 74.55 அடியாக (80 அடி) உள்ளது. வினாடிக்கு 167 கன அடி நீர் வரத்தும், 7 கன அடி வெளியேற்றமும் உள்ளது.

குதிரை ஆறு அணை நேற்று மாலை 4:30 மணிக்கு 75 (80)அடியாக உயர்ந்த நிலையில் இங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் குதிரை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி பொதுமக்களுக்கு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் உதயகுமார் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us