ADDED : ஜூன் 04, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் வ.வே.சு., அய்யர் நுாற்றாண்டு நினைவு தினம், கடலுார் அஞ்சலையம்மாளின் 136 வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது.
தலைவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. செயற்குழு உறுப்பினர் அருணகிரி முன்னிலை வகித்தார்.
துணைத்தலைவர் திருமுருகன் வரவேற்றார். மகளிர் அணி தலைவி சுசிலாராணி பேசினார்.
மாநகர் தலைவர் திருமலைச்சாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை வைரவேல் செய்தார்.