/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' பிரையன்ட் பூங்காவில் பூக்க துவங்கிய மலர்கள்
/
'கொடை' பிரையன்ட் பூங்காவில் பூக்க துவங்கிய மலர்கள்
'கொடை' பிரையன்ட் பூங்காவில் பூக்க துவங்கிய மலர்கள்
'கொடை' பிரையன்ட் பூங்காவில் பூக்க துவங்கிய மலர்கள்
ADDED : ஏப் 18, 2025 02:06 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளிலிருந்து பூக்கள் பூக்க துவங்கியுள்ளன.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். வரும் 62 வது மலர்கண்காட்சிக்காக சில மாதங்களுக்கு முன் மூன்று கட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நடந்தது. இதில் ஆப்ரிக்கன் மேரிகோல்டு, ஆஸ்டர், பெக்கோனியா, கேலண்டுல்லா, காஸ்மாஸ் , டெல்பினியம், கஜேனியா, பேன்ஸி, பெட்டுன்யா, சால்வியா உள்ளிட்ட 26 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. கோடையில் வெளுத்து வாங்கிய வெயிலுக்கிடையே கோடை மழை குளிர்வித்ததால் செடிகள் நன்கு தளிர்த்து தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இவற்றை ரசித்து செல்கின்றனர். எதிர்வரும் வாரங்களில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.