/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கவனம் செலுத்தலாமே: உள்ளாட்சிகளில் பகலிலும் எரிகிறது தெருவிளக்குகள்
/
கவனம் செலுத்தலாமே: உள்ளாட்சிகளில் பகலிலும் எரிகிறது தெருவிளக்குகள்
கவனம் செலுத்தலாமே: உள்ளாட்சிகளில் பகலிலும் எரிகிறது தெருவிளக்குகள்
கவனம் செலுத்தலாமே: உள்ளாட்சிகளில் பகலிலும் எரிகிறது தெருவிளக்குகள்
ADDED : பிப் 08, 2025 05:34 AM

மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் அமைக்கப்பட்டிருக்கும் தெருவிளக்குகள் அணைப்பதற்கு யாருமின்றி 24 மணி நேரமும் எரிகின்றன. நடுத்தரமான ஒரு ஊராட்சியில் குறைந்தது 200 தெருவிளக்குகள் இருக்கும். 50 இடங்களிலாவது இவற்றை 'ஆன், ஆப்' செய்வதற்குரிய 'சுவிட்ச்'கள் அமைக்கப்பட்டிக்கும்.
ஆனால் சூரிய உதயம் ஏற்பட்டதும் 'ஆப்' செய்யவோ, சூரியன் மறைந்து இரவு துவங்கும் போது 'ஆன்' செய்யவோ யாரும் இருப்பதில்லை. அதோடு பல இடங்களில் தெருவிளக்குகள் அமைத்து அதற்குரிய தனி மின்ஒயர்களை இணைத்து ஒரு 'சுவிட்ச்' பெட்டி வைக்க வேண்டும் என்றால் மின்வாரியத்திற்கு ஊராட்சி சார்பில் பணம் செலுத்த வேண்டும். ஆனால் இதை செய்யாமல் பல இடங்களிலும் மின்கம்பங்களில் தெருவிளக்கு பல்புகளை தொங்கவிட்டு நேரடியாக மின்பாதையில் இணைத்துவிடுகின்றனர்.
மின்நிலையத்தில் சப்ளை நிறுத்தும்போது தவிர மற்ற எல்லா நேரங்களிலும் எரிந்து கொண்டே இருக்கும். இதனால் அதன் ஆயுள் காலமும் விரைவாக முடிந்து ஊராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது. நகர்புற உள்ளாட்சிகளின் ஊழியர் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் ஊராட்சிகளில் மிகவும் குறைவு என்பதால் தெருவிளக்குகளை 'ஆன், ஆப்' செய்வதற்கு எந்த பணியாளரும் வருவதில்லை. சில இடங்களில் வீடு அருகில் 'சுவிட்ச்' பெட்டி இருந்தாலும் அதை 'ஆன்,ஆப்' செய்து முறையாக பயன்படுத்தாதவர்களும் இருக்கவே செய்கின்றனர். ஒருபக்கம் மக்களின் தேவையை நிறைவேற்ற உள்ளாட்சி அமைப்பினர் கடமையை செய்ய அதை முறையாக பயன்படுத்து வழிகாட்டுதல் இல்லாமல் இவ்விஷயத்தில் மின்சாரமும், மின் உபகரணங்களின் செலவும் வீணாடிக்கிறது. இதை தடுக்க விழிப்புணர்வு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும்.