sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மரக்கன்றுகள் நடவு செய்து வெப்பமயமாதலை தடுக்கும் 'தளிர்'

/

மரக்கன்றுகள் நடவு செய்து வெப்பமயமாதலை தடுக்கும் 'தளிர்'

மரக்கன்றுகள் நடவு செய்து வெப்பமயமாதலை தடுக்கும் 'தளிர்'

மரக்கன்றுகள் நடவு செய்து வெப்பமயமாதலை தடுக்கும் 'தளிர்'


ADDED : அக் 07, 2024 05:42 AM

Google News

ADDED : அக் 07, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேலான மரக்கன்றுகளை நடவு செய்து புவி வெப்பமயமாதலை தடுக்கும் முயற்சியில் தளிர் நண்பர்கள் மரம் நடும் குழுவினர் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மங்கள் அழிக்கப்பட்டதால் மழை இல்லாமல்,புவி வெப்பமாகும் நிலை இருந்தது. இதை தடுக்கும் வகையில் 2018ல் தன்னார்வலர்கள்,இயற்கை ஆர்வலர்கள்,சமூக ஆர்வலர்கள் இணைந்து தளிர் நண்பர்கள் மரம் நடும் குழு என்ற அமைப்பை தொடங்கினர். இவர்கள் ரோட்டோரங்கள்,கண்மாய்கள் அருகில்,குளக்கரைகள்,பொது இடங்கள்,அரசு பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் தங்களால் முடிந்த அளவிற்கு இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்து அதை குறிப்பிட்ட நாட்கள் வரை வேலிகள் அமைத்து பாதுகாக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழலை மக்கள் அனைவரும் சேர்ந்து காப்பாற்றும் விதமாக அடிக்கடி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர். இதுவரை இவர்கள் திண்டுக்கல் நகரை சுற்றி 10 ஆயிரத்திற்கும் மேலான மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து அதை மரமாக்கியுள்ளனர். இவர்களின் செயல்களை பார்த்து ஏராளமான தன்னார்வலர்கள் இவர்களோடு இணைந்து பணியாற்ற சேர்ந்துள்ளனர். மரங்களை அதிகளவில் நடுவதன் மூலம் சுற்றுச்சூழலை காப்பதோடு புவி வெப்பமயமாதலையும் தடுப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் எனவும் பொது மக்கள் மத்தியில் இவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். வேப்பம்,அத்தி,புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான

மரக்கன்றுகளை சமூக அக்கறையோடு நடவு செய்து பராமரிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர்.

.......

சுத்தமான காற்று உருவாகும்

சந்திரசேகர்,தலைவர்,தளிர் நண்பர்கள் மரம் நடும் குழு,திண்டுக்கல்: எங்களின் முழு நோக்கமே நவீன உலகத்தில் புவி வெப்பமயமாதல் அதிகளவில் நடந்து கொண்டே இருக்கிறது. இது மனித சமூகத்திற்கு அழிவை ஏற்படுத்திவிடும். அதிலிருந்து தப்பிப்பதற்காக எங்களால் முடிந்த அளவிற்கு மரக்கன்றுகளை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்கிறோம். மரங்களை நடவு செய்து பராமரிப்பதன்மூலம் பல உயிரினங்கள் உலகில் வாழும் காலநிலை உருவாகும். சுத்தமான ஆகிஸிஜன் காற்று மக்கள் சுவாசிப்பதற்கு கிடைக்கும் என்பதற்காக கண்ணில் பார்க்கும் இடங்களிலெல்லாம் மரக்கன்றுகளை நடவு செய்கிறோம். நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் பல தன்னார்வலர்கள் எங்கள் அமைப்போடு இணைந்து அவர்களும் இயற்கையை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.

.......

குழந்தைகளுக்கு விழிப்புணர்வு தேவை

ஷேக்முஜிபுர் ரகுமான்,சமூக ஆர்வலர்,திண்டுக்கல்: இயற்கையை காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிக கடமை. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நாம் சுத்தமான காற்றையும்,சுற்றுச்சூழலையும் விட்டு செல்வதற்காக மரக்கன்றுகளை மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நடவு செய்து அதை பராமரிக்க வேண்டும். சுற்றுச்சூழல் முறையாக இருந்தால் தான் உயிரினங்கள் பூமியில் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை உருவாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை நடவு செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

..............................................................






      Dinamalar
      Follow us