sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' மருந்து கடைகளுக்கு வனத்துறை நோட்டீஸ்

/

'கொடை' மருந்து கடைகளுக்கு வனத்துறை நோட்டீஸ்

'கொடை' மருந்து கடைகளுக்கு வனத்துறை நோட்டீஸ்

'கொடை' மருந்து கடைகளுக்கு வனத்துறை நோட்டீஸ்


ADDED : நவ 22, 2024 05:03 AM

Google News

ADDED : நவ 22, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் வெங்கலவயல் பகுதியில் காட்டு யானை பலியான நிலையில் உடற்கூறு பரிசோதனையில் போரட் காலிப்பை இருந்தது தெரிந்தது.

வனத்துறை உரம் ,பூச்சி மருந்து விற்கும் கடைகளுக்கு எச்சரிக்கையை நோட்டீஸ் வழங்கியது.

கொடைக்கானல் பகுதியில் யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் நடமாட்டம் பரவலாக உள்ளது. பெருமாள்மலை பிரிவுக்குட்பட்ட பேத்துப்பாறை விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்ட போது பூச்சிக்கொல்லி மருந்தின் காலி பைகள் முறையாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே விவசாய நிலத்தில் இருந்தது தெரிந்தது.

அரசு நெறிமுறைகளின் படி விவசாய நிலங்களில் பூச்சி மருந்துகளை பயன்படுத்திய பின் காலி பைகளை முறையாக அப்புறப்படுத்த விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட உரம் பூச்சிக்கொல்லி மருந்து விற்கும் நிறுவனங்கள் அறிவுறுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளை முறையாக அப்புறப்படுத்தாத நிலையில் நீரோடைகளில் கலந்து மனித, வன உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பூச்சிக்கொல்லி மருந்துகளால் வன உயிரினங்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் ரேஞ்சர் சுரேஷ்குமார் எச்சரிக்கை கடிதத்தில் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us