sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி கோயில் யானையை கண்காணிக்கும் வனத்துறை

/

பழநி கோயில் யானையை கண்காணிக்கும் வனத்துறை

பழநி கோயில் யானையை கண்காணிக்கும் வனத்துறை

பழநி கோயில் யானையை கண்காணிக்கும் வனத்துறை


ADDED : நவ 22, 2024 07:41 PM

Google News

ADDED : நவ 22, 2024 07:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திருச்செந்துார் யானை தாக்கி பாகன் உட்பட இருவர் பலியான சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் யானை கஸ்துாரியை வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை தாக்கியதில், உதவி பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக பழநி முருகன் கோயில் யானை கஸ்துாரியை தினமும் காலை, அதன் கால்கள், துதிக்கையின் அசைவுகள் வித்தியாசமாக உள்ளதா, நடவடிக்கையில் எதுவும் மாற்றம் இருக்கிறதா,உணவுகளை முறையாக சாப்பிடுகிறதா என ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணிக்க அலுவலர்களை திண்டுக்கல் வனத்துறை அதிகாரிகள் நியமித்துள்ளனர்.

அதன்படி யானை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாற்றமும் இல்லை. யானை இயல்பு நிலையில் உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ குழுவினரும் யானையை பரிசோதனை செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us