ADDED : பிப் 27, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் :காட்டுவேலம்பட்டி கரந்தமலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் மா, கொய்யா, தென்னை உள்ளிட்ட மரங்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கு நேற்று திடீரென காட்டுத் தீ பற்றி எரிந்தது. நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் செடி, கொடிகள் தீயில் கருகின.