/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாழ்வான மின்ஒயர்களால் அடிக்கடி சப்ளை துண்டிப்பு
/
தாழ்வான மின்ஒயர்களால் அடிக்கடி சப்ளை துண்டிப்பு
ADDED : டிச 02, 2024 07:11 AM
வடமதுரை: வடமதுரையில் நெடுஞ்சாலையை குறுக்கிடும் மின்ஒயர்கள் தாழ்வாக செல்வதால் உயரமான வாகனங்கள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
வடமதுரையில் நால்ரோடு பைபாஸ் சந்திப்பு பகுதியிலிருந்து 200 மீட்டர் துாரத்தில் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் கோட்டை நாயுடு களம் பிரிகிறது.
இப்பகுதியில் ரோட்டின் குறுக்காக செல்லும் மின்ஒயர்கள் தாழ்வாக உள்ளதால் அதிகபட்ச அனுமதி அளவை காட்டிலும் உயரமாக சரக்கு லோடுடன் வரும் வாகனங்களில் இந்த மின்ஒயர்கள் மோதுகின்றன. இதனால் இங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் சப்ளை துண்டிக்கப்படுகிறது. இதேநிலை அடிக்கடி ஏற்படுவதும், மின்வாரிய ஊழியர்கள் சீரமைக்கும் வரை இப்பகுதியில் இருக்கும் வீடுகள், வணிக நிறுவனங்கள் விவசாய கிணறுகள் மின்சப்ளை இல்லாமல் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
துாங்கணம்பட்டி வியாபாரி துரைச்சாமி கூறியதாவது: இங்குள்ள ரோட்டில் இப்பகுதி மின்ஒயர்கள் மட்டுமே தாழ்வாக உள்ளன. சில உயரமான வாகனங்களின் மேல்பகுதி உரசி டிரான்ஸ்பார்மரில் 'பீஸ்' அடித்து சப்ளை துண்டிக்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு தகவல் தந்து சீரமைப்பு பணி நடப்பதற்கு பல மணி நேரமாகிறது. அதுவரை மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இங்குள்ள மின்ஒயர்களை உயர்த்த வேண்டும் என்றார்.