ADDED : செப் 22, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மதுரை சென்ற ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா, குட்காவை திண்டுக்கல் ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஹைதராபாத்,காச்சிக்குடா - மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கைக்கு கீழே வைத்திருந்த பையில் இருந்த 4 கிலோ கஞ்சா, 6 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர். கடத்தியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.