ADDED : செப் 07, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை,: பாகாநத்தம் மலைப்பட்டியில் வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி.மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தின. தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார்.
அறக்கட்டளை நிறுவனர் வீரா சாமிநாதன் துவக்கி வைத்தார். டாக்டர் துரை தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் திரவியராஜ், தி.மு.க., ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.பி.சிவா, வட்டார காங்., தலைவர் ராஜரத்தினம் பங்கேற்றனர்.

