நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: சித்துவார்பட்டி பாலக்குறிச்சியில் வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி.மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தின.
கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாண்டி துவக்கி வைத்தார். நகர செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். டாக்டர் துரை தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் துரை கலைஞர், முன்னாள் ஊராட்சி தலைவர் சிவசக்தி பங்கேற்றனர்.

