UPDATED : ஜூலை 07, 2026 07:54 PM
ADDED : ஜூலை 07, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை:முசுவனுாத்து அன்னை அறக்கட்டளை, நிலக்கோட்டை கணித மன்றம் சார்பில் 10, 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மன்ற தலைவர் பிச்சைநாதன் தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குனர் காசிமாயன் வரவேற்றார்.
காந்தி கிராம பல்கலை., துணைவேந்தர் பஞ்சநதம் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். ஒன்றிய பெற்றோர், ஆசிரியர் சங்கத்தலைவர் செல்வராஜ், கலெக்டர் நேர்முக உதவியாளர் சரவணக்குமார் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா நன்றி கூறினார்.
