/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்கம்பத்தில் டூவீலர் மோதி சிறுமி பலி
/
மின்கம்பத்தில் டூவீலர் மோதி சிறுமி பலி
ADDED : பிப் 05, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே மின்கம்பத்தில் டூ வீலர் மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கருங்கல் ஊராட்சி சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை 35. இவர் புங்கமடைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று மீண்டும் டூவீலரில் மகள் யோகனா 9, உள்ளிட்ட 4 பேருடன் திரும்பிக்கொண்டிருந்தார்.
டி.கூடலுார் திண்டுக்கல் ரோட்டில் கரும்பாறைப்பட்டி பிரிவு அருகே வந்தபோது டூவீலர் ரோட்டோர மின்கம்பத்தில் மோதியது.
இதில் யோகனா சம்பவ இடத்திலேயே இறந்தார். சின்னத்துரை, மற்றொரு மகள் காயமடைந்தனர். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.