/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை பொங்கல் பண்டிகையால் விறுவிறுப்பு
/
அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை பொங்கல் பண்டிகையால் விறுவிறுப்பு
அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை பொங்கல் பண்டிகையால் விறுவிறுப்பு
அய்யலுாரில் ரூ.3 கோடிக்கு ஆடு, கோழி விற்பனை பொங்கல் பண்டிகையால் விறுவிறுப்பு
ADDED : ஜன 10, 2025 02:43 AM

வடமதுரை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலுாரில் நேற்று நடந்த வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் ரூ.3 கோடிக்கு விற்பனையானது.
வடமதுரை அய்யலுாரில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளுடன் விவசாயிகள், வியாபாரிகள் வந்தனர்.
அதிகாலை 3:00 மணிக்கு துவங்கிய வியாபாரம் காலை 9:00 மணிக்குள் முடிந்தது. சந்தை வளாகத்தில் இடம் போதாமல் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டிலும் விற்பனை நடந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பொங்கலையொட்டி ஆங்காங்கே மறைவிடங்களில் சேவல் சண்டை சூதாட்டம் அதிகம் நடக்கும் என்பதால் பந்தய சேவல்களுக்கு அதிக கிராக்கி இருந்தது. சேவல்களை சண்டையிட செய்து திறனை சோதித்து வாங்கி சென்றனர்.
வியாபாரிகள் கூறுகையில் 'சந்தையில் ஆடு, கோழிகள் வரத்தும், விலையும் அதிகமாக இருந்தது. மொத்த விற்பனை ரூ.3 கோடிக்கு நடந்தது.
உயிர் எடை அளவில் நாட்டு கோழி கிலோ ரூ.450, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் கிலோ ரூ.700, சண்டை சேவல் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகின 'என்றனர்.

