sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடியிருப்பு பகுதியில் ஆடு வதை: மிரட்டும் போதை நபர்கள் பிரச்னைகளின் பிடியில் கொடைக்கானல் 18வது வார்டு மக்கள்

/

குடியிருப்பு பகுதியில் ஆடு வதை: மிரட்டும் போதை நபர்கள் பிரச்னைகளின் பிடியில் கொடைக்கானல் 18வது வார்டு மக்கள்

குடியிருப்பு பகுதியில் ஆடு வதை: மிரட்டும் போதை நபர்கள் பிரச்னைகளின் பிடியில் கொடைக்கானல் 18வது வார்டு மக்கள்

குடியிருப்பு பகுதியில் ஆடு வதை: மிரட்டும் போதை நபர்கள் பிரச்னைகளின் பிடியில் கொடைக்கானல் 18வது வார்டு மக்கள்


ADDED : நவ 15, 2024 05:51 AM

Google News

ADDED : நவ 15, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: குடியிருப்பு பகுதியில் ஆடு வதை கூடம் , மிரட்டும் போதை நபர்கள், வாகனங்களை ரோட்டோரம் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு என கொடைக்கானல் நகராட்சி 18வது வார்டில் பிரச்னைகள் கொடிகட்டி பறக்கின்றன.

ஆனந்தகிரி 1, 2, 3 தெருக்களை கொண்ட இந்த வார்டில் நீதிமன்றம், பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. சேதமடைந்த சாக்கடையால் கழிவு நீர் தேங்கி நோய் தொற்றுக்கு வழி வகுக்கிறது. குடியிருப்பு பகுதியில் வதை செய்யப்படும் ஆடுகளால் குடியிருப்போர் முகம் சுளிக்கும் நிலை தொடர்கிறது . தெரு நாய், வளர்ப்பு மாடுகளால் மக்கள் தினமும் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இடிந்து விழும் நிலையில் உள்ள சுகாதார வளாகத்தால் மக்கள் பாதிக்கின்றனர். வார்டில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ள போதை வஸ்துக்களால் போதை நபர்கள் தொல்லை தாங்க முடியல. குப்பைத்தொட்டி இல்லாததால் ஆங்காங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. ரோடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தெரு நாய் பிரச்னையால் குடியிருப்புவாசிகள் அச்சப்படும் நிலை உள்ளது. ஆனந்தகிரி ஒன்றாவது தெருவில் கட்டுமான பொருட்கள் குவித்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. காமராஜர் சாலை பகுதியில் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பால் அவதி


சுலைமான், டிரைவர்: ஆனந்தகிரி 3 வது தெருவில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்த சுகாதார வளாகம் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் புதர் மண்டி விஷப் பூச்சிகள் நடமாட்டம் உள்ளது.

தெருவில் கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துகளை சமூக விரோதிகள் பயன்படுத்துவதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது.

நோய் தொற்றுக்கு வழி


வனராஜ், வியாபாரி : ஆனந்தகிரி 2 வது தெருவில் குடியிருப்பு பகுதியில் ஆட்டு கொட்டகை அமைத்து அங்கு ஆடுகள் வதை செய்யப்படுகிறது. இறைச்சிக் கழிவுகள் , எச்சம், குப்பை குவியலால் துர்நாற்றம் ஏற்பட்டு குடியிருப்பு வாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது. கொசுக்கள் அதிகரித்து ஏராளமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். நகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றனர்.இதனால் குடியிருப்புவாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது.

நடவடிக்கை இல்லை


சுப்ரமணி, (அ.தி.மு.க.,) கவுன்சிலர் : ரூ. 30 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனந்தகிரி மூன்றரை தெருவில் சமூக விரோதிகள் குறித்து பலமுறை எச்சரிக்கை செய்தும் கவுன்சிலராகிய தன்னை சமூகவிரோதிகள் மிரட்டுப் போக்கும் உள்ளது.போலீசில் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. ஆனந்திகிரி சுகாதார வளாகங்களை அப்புறப்படுத்த நகராட்சியில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. சேதமடைந்த சாக்கடைகளை சீரமைக்க வலியுறுத்தியும் நகராட்சி கண்டுகொள்ள வில்லை. சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். குடியிருப்புக்கு மத்தியில் ஆடு வதை செய்யப்படுவது குறித்து நகராட்சியில் புகார் அளித்தும் அரசியல் தலையீடு காரணமாக நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். தெருக்களில் கட்டுமானப் பொருட்கள் குவிப்பதை தடுக்க எச்சரிக்கை செய்து உள்ளேன். மொத்தத்தில் வளர்ச்சி பணிகளில் தனது வார்டு பின்தங்கியுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us