/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலி சான்றிதழ் கொடுத்து பணி அரசு டிரைவர் சஸ்பெண்ட்
/
போலி சான்றிதழ் கொடுத்து பணி அரசு டிரைவர் சஸ்பெண்ட்
போலி சான்றிதழ் கொடுத்து பணி அரசு டிரைவர் சஸ்பெண்ட்
போலி சான்றிதழ் கொடுத்து பணி அரசு டிரைவர் சஸ்பெண்ட்
ADDED : நவ 18, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறையில் போலி சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்த டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறையில் பஞ்சம்பட்டியை சேர்ந்த அந்தோணி, அரசு ஜீப் டிரைவராக 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அவரின் 8ம் வகுப்பு மாற்றுச்சான்றிதழை கல்வித்துறைக்கு அனுப்பி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சான்றிதழ் போலி என உறுதியானது. அவர், 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது தெரிந்தது. அந்தோணியை சஸ்பெண்ட் செய்து செய ற்பொறியாளர் கண்ணன் தேவன் உத்தரவிட்டார்.

