ADDED : ஏப் 18, 2025 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குவோர், சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் வழங்குவதை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்கக் கோரி ,தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இதற்கு சங்க மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வணிக வரி அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் திரவியராஜா, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரேடேரிக் எங்கல்ஸ் கலந்து கொண்டனர்.

