ADDED : ஜூலை 11, 2025 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: அரசு ஊழியர்கள் மீதும், அலுவலகத்தில் தகாத முறையிலும் நடந்து கொண்டு பொய் புகார் அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார்.
செயலாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் சங்க மாநில தலைவர் சுப்பையா, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஓய்வூதியர்களின் சங்க மாநில தலைவர் சுப்பையா, வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜான்பாஸ்டின் டல்லஸ் பேசினர். சத்துணவு ஊழியர் சங்கம் ஜெஸி நன்றி கூறினார்.