sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மழையில் இடிந்த அரசு பள்ளி கட்டட கூரை விடுமுறையால் விபத்து தவிர்ப்பு

/

மழையில் இடிந்த அரசு பள்ளி கட்டட கூரை விடுமுறையால் விபத்து தவிர்ப்பு

மழையில் இடிந்த அரசு பள்ளி கட்டட கூரை விடுமுறையால் விபத்து தவிர்ப்பு

மழையில் இடிந்த அரசு பள்ளி கட்டட கூரை விடுமுறையால் விபத்து தவிர்ப்பு


ADDED : டிச 15, 2024 07:18 AM

Google News

ADDED : டிச 15, 2024 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வி.டி.பட்டியில் தொடர் மழையில் அரசு ஆரம்பப்பள்ளி கட்டட கூரை இடிந்து விழுந்தது-. பள்ளி விடுமுறை என்பதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

வி.டி.பட்டி ஊராட்சியிலுள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 4 வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. இதில் 2 வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 2 கட்டடங்களின் கூரை சேதமடைந்து மழை பெய்யும் போது தண்ணீர் வகுப்பறைக்குள் விழுகிறது.

மழை நீரால் மாணவர்கள் உட்காரும் பெஞ்சு, மேஜை, கல்வி சாதனங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் இந்த வகுப்புகளில் உள்ள மாணவர்களை மற்ற வகுப்பறையில் உட்கார வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பள்ளி கூரை இடிந்து வகுப்பறைக்குள் விழுந்தது.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வகுப்பறை கட்டடங்களை சீரமைத்து மாணவர்கள் சிரமம் இன்றி கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us