/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலை ரோட்டில் பழுதான அரசு பஸ்: பரிதவித்த பயணிகள்
/
மலை ரோட்டில் பழுதான அரசு பஸ்: பரிதவித்த பயணிகள்
ADDED : நவ 02, 2024 06:26 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலை ரோட்டில் இன்ஜின் பழுதால் அரசு பஸ் பாதி வழியில் நின்றதால் பயணிகள் பரிதவித்தனர்.
வத்தலக்குண்டிலிருந்து நேற்று காலை ஆடலுார் செல்லும் அரசு பஸ் தாண்டிக்குடி சித்தரேவு மலை ரோட்டில் இன்ஜின் பழுதாக நின்றது.
பயணிகள் அவதியடைந்தனர்.அடிக்கடி இம்மலை ரோட்டில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பழுதாவதால் பயணிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
வத்தலக்குண்டு அரசு கிளை மூலம் ஏராளமான பஸ்கள் மலைப்பகுதிக்கு இயக்கப்படும் நிலையில் இன்ஜின் பழுது, ரேடியேட்டர், பிரேக், மாற்று டயர் இல்லாத நிலை உள்ளிட்ட பழுதுகளால் பாதி வழியில் நிற்கும் பரிதாபம் உள்ளது. இதை சீர் செய்ய இனியாவது போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

