/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 30, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர்: வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக எம்.வி.எம்., கல்லூரியின் முதல்வர் லட்சுமி பங்கேற்று பேசுகையில், 'மாணவர்கள் தங்களது பெற்றோரை மதிக்க வேண்டும்.
மனிதநேயத்துடன், ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும்.
எந்த முயற்சியிலும் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்' என்றார். துறை வாரியாக மொத்தம் 378 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.