sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மொபட் மீது லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி

/

 மொபட் மீது லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி

 மொபட் மீது லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி

 மொபட் மீது லாரி மோதி தாத்தா, பாட்டி, பேத்தி பலி


ADDED : நவ 17, 2025 01:51 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்தலக்குண்டு: மொபட் மீது டிப்பர் லாரி மோதியதில் தாத்தா, பாட்டி, பேத்தி பலியாகினர்; பேரன் படுகாயமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன், 60. இவரது மனைவி ஜோதி, 52. பேரன் வர்ஷன், 12; பேத்தி வர்ஷினி, 9. நான்கு பேரும் மொபட்டில், உசிலம்பட்டியில் நடந்த காதணி விழாவில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நேற்று மாலை, 5:00 மணிக்கு விருவீடு சாந்திபுரம் விலக்கு இடையே சென்ற போது, கிராவல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி நேருக்கு நேர் மொபட் மீது மோதியதில் காத்தவராயன், ஜோதி, வர்ஷினி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வர்ஷன் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் பலியானதையடுத்து, தெப்பத்துப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.






      Dinamalar
      Follow us