/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாட்டி, தாத்தாவை தாக்கி நகை பறித்த பேரனுக்கு வலை
/
பாட்டி, தாத்தாவை தாக்கி நகை பறித்த பேரனுக்கு வலை
ADDED : ஏப் 20, 2025 11:42 PM
எரியோடு : திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே கிழக்கு மாரம்பாடியைச் சேர்ந்தவர்கள் விவசாய தம்பதி வேளாங்கண்ணி ஆரோக்கியம், 70; கேத்தரின்மேரி, 64. மகன்கள் இருவரும் திருமணமாகி தனியே சென்ற நிலையில், தம்பதி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியே வசிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தம்பதியை குச்சியால் தாக்கி, கத்தியால் குத்தி கேத்தரின்மேரி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து சென்றனர்.
காயமடைந்த தம்பதியை உறவினர்கள், வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தம்பதியின் பேரன் அருண்குமார், 40, உள்ளிட்ட இருவரை எரியோடு போலீசார் தேடுகின்றனர்.

