/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரிவாளுடன் சுற்றியவர் மீது குண்டாஸ்
/
அரிவாளுடன் சுற்றியவர் மீது குண்டாஸ்
ADDED : செப் 02, 2025 06:20 AM

நத்தம் : -நத்தம்- அண்ணாநகரை சேர்ந்தவர் ரபீக்ராஜா 29.இவர் மீது திருட்டு, கொள்ளை, கஞ்சாவிற்பனை,பொது சொத்துகளை சேதப்படுத்துதல், வணிக நிறுவனங்களை சேதப்படுத்தியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆக. 20-ல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அரிவாளுடன் தரையில் உரசியபடி உலா வந்தார். குட்டூரை சேர்ந்த ராஜாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி 2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு சென்றார்.
கடைக்காரர்களையும் மிரட்டினர். இது தொடர்பான வீடியோ வைரலானது. நத்தம் - போலீசார் ரபீக்ராஜாவை கைது செய்தனர். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., பிரதீப் கலெக்டர் சரவணனிடம் பரிந்துரை செய்ய குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.