ADDED : நவ 08, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அடுத்த ஜவ்வாதுப்பட்டியைச் சேர்ந்தவர் சசிக்குமார் 27 தனது உறவினரான 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார்.
அதன்பேரில் இவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் 2023 ல் கைது செய்தனர்.இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரித்த நீதிபதி சரண், குற்றம்சாட்டப்பட்ட சசிக்குமாருக்கு ஆயுள் தண்டனை , ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.