sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சிறுமிகளுக்கு தொல்லை: இருவருக்கு சிறை

/

சிறுமிகளுக்கு தொல்லை: இருவருக்கு சிறை

சிறுமிகளுக்கு தொல்லை: இருவருக்கு சிறை

சிறுமிகளுக்கு தொல்லை: இருவருக்கு சிறை


ADDED : அக் 30, 2024 02:56 AM

Google News

ADDED : அக் 30, 2024 02:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:நத்தத்தில் பள்ளி சிறுமி, வத்தலக்குண்டில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தென்காசி மேக்கரையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜாகிர்உசேன் 23. இவர் 2023ல் திருப்பூரில் வேலை செய்தார். அப்போது நத்தத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் குடும்பத்துடன் திருப்பூரில் இருந்தார். இருவரும் பழகினர். இந்நிலையில் அச்சிறுமி குடும்பத்துடன் நத்தத்திற்கு வந்த நிலையில் இங்கு வந்தஜாகிர் உசேன் காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இந்தவழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் ஜாகிர் உசேனுக்கு 30 ஆண்டு சிறை ,ரூ.1.10 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.

மற்றொரு வழக்கு


வத்தலக்குண்டு கூலித்தொழிலாளி சக்திவேல்37. இவர் 2020ல் இப்பேரூராட்சியில் துாய்மைப் பணியாளராக இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த 16 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

இதில் சக்திவேலுக்கு 9 ஆண்டு சிறை , ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us