ADDED : நவ 22, 2024 02:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று 2வது நாளாக காலை முதலே சாரல் மழை பெய்தது. நகரை பனிமூட்டம் சூழ்ந்தது. மதியம்வரை விட்டு விட்டு சாரல் தொடர்ந்தது.
வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. தாண்டிக்குடி கீழ் மலைப் பகுதியிலும் இடைவிடாது சாரல் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.