/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' மலைப்பகுதியில் இயந்திர பயன்பாடு ஜோர்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
'கொடை' மலைப்பகுதியில் இயந்திர பயன்பாடு ஜோர்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
'கொடை' மலைப்பகுதியில் இயந்திர பயன்பாடு ஜோர்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
'கொடை' மலைப்பகுதியில் இயந்திர பயன்பாடு ஜோர்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : அக் 15, 2025 12:48 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் அனுமதியின்றி இயந்திர பயன்பாடு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., எச்சரிக்கையை மீறியும் இதன் பயன்பாடு தாரளமாக நடந்து வருகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைத் தள பாதுகாப்பு சட்டப்படி போர்வெல், கம்ப்ரஷர், மண் அள்ளும் இயந்திரம், பாறை தகர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு தடை உள்ளது. ஆனால் இவை இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
இருந்தாலும் கொடைக்கானல் ஆர்.டி.ஓ., வாக உள்ள திருநாவுக்கரசு இயந்திர பயன்பாட்டிற்கு மலைப்பகுதியில் தடை விதித்து கடுமை காட்டி வருகிறார். சம்மந்தமந்தப்பட்ட வி.ஏ.ஓ., ஆர்.ஐ.,க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் அலுவலகங்களில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ., கண்டிப்பை மீறியும் கொடைக்கானலில் இயந்திர பயன்பாடு இரவு, பகலாக தாராளமாக நடந்தேறுகின்றன.
மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட இயந்திரப் பயன்பாடு செயல்பட்டும் வருவாய்த்துறையினர் கண்டு கொள்ளவில்லை என்பது சட்டத்தின் கடுமை நலிவடைந்துள்ளதற்கு உதாரணமாக உள்ளது.
ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு கூறுகையில், ''கனரக இயந்திர பயன்பாட்டிற்கு தடை உள்ளது.
மாவட்ட நிர்வாகம் மூலம் 15 மண் அள்ளும் இயந்திரங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில வாகனங்களுக்கு பெற்ற அனுமதியை தவறாக மற்ற வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக துறை ரீதியாக கூட்டம் நடத்தி ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.