sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநி ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்கள் ஜப்தி: பேச்சுவார்த்தையில் அவகாசம்

/

பழநி ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்கள் ஜப்தி: பேச்சுவார்த்தையில் அவகாசம்

பழநி ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்கள் ஜப்தி: பேச்சுவார்த்தையில் அவகாசம்

பழநி ஆர்.டி.ஓ., அலுவலக பொருட்கள் ஜப்தி: பேச்சுவார்த்தையில் அவகாசம்


ADDED : அக் 15, 2025 12:49 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி : பழநி சித்த மருத்துவக் கல்லுாரிக்கு இடம் வழங்கிய நில உரிமையாளரான பழனிசாமி குடும்பத்தினருக்கு நிலுவை தொகை தாமதமானதால் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவுப்படி வந்த ஊழியர்கள்பேச்சுவார்த்தைக்கு பின் திரும்பி சென்றனர்.

பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற ஊழியர்கள் வருகை புரிந்தனர்.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கட்டப்படவுள்ள சித்த மருத்துவ கல்லுாரிக்கு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி குடும்பத்தினர் 1988ல் நிலம் வழங்கினர்.

இந்த இடத்திற்கான விலை நிர்ணயம் செய்வதற்கான வழக்கு பழநி சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தரப்பில் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சார்பு நீதிமன்ற உத்தரவை 2011 ல் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

நிலுவை தொகை வழங்க அரசு காலதாமதம் செய்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ரேணுகாதேவி, ரூ. ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் வழங்க தாமதம் செய்ததால் பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று (அக்.14ல்) நீதிமன்ற ஊழியர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கால அவகாசம் கேட்க திரும்பி சென்றனர்.






      Dinamalar
      Follow us