sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மலைக்கோட்டையில் அபிராமி அம்மனை அமர்த்த மாநாடு ஹிந்து முன்னணி மாநில செயலர் தகவல்

/

மலைக்கோட்டையில் அபிராமி அம்மனை அமர்த்த மாநாடு ஹிந்து முன்னணி மாநில செயலர் தகவல்

மலைக்கோட்டையில் அபிராமி அம்மனை அமர்த்த மாநாடு ஹிந்து முன்னணி மாநில செயலர் தகவல்

மலைக்கோட்டையில் அபிராமி அம்மனை அமர்த்த மாநாடு ஹிந்து முன்னணி மாநில செயலர் தகவல்


ADDED : டிச 04, 2024 08:26 AM

Google News

ADDED : டிச 04, 2024 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ''மலைக்கோட்டையில் அபிராமி அம்மனை அமர்த்தும் நோக்கில் திண்டுக்கல்லில் விரைவில் ஆன்மிக மாநாடு நடக்க உள்ளதாக'' ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் கூறினார்.

ஹிந்து முன்னணி அமைப்பில் ஒன்றான ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் பெண்களுக்கு பயிற்சி முகாம் திண்டுக்கல்லில் நடந்தது.ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் ராஜேஷ் வழி நடத்தினார். மாவட்ட தலைவர் ராஜா, துணைத் தலைவர்கள் வினோத்ராஜா, ரவிச்சந்திரன், செயலர் மணிமாறன் முன்னிலை வகித்தனர்.

மாதந்தோறும் பவுர்ணமியன்று திண்டுக்கல் மலைக்கோட்டை பத்மகிரிமலையை சுற்றி நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை சிறப்படைய செய்வற்காக குழந்தைகளுக்கான பண்பாட்டு வகுப்பு, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகளை நடத்துவதற்கு கற்றுக் கொள்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. கிரிவலம், மலைக்கோட்டையில் மீண்டும் அபிராமி அம்மனை பிரதிஷ்டை செய்வது குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மாநில செயலர் செந்தில்குமார் கூறுகையில் ,''மலைக்கோட்டையில் அபிராமி அம்மனை அமர்த்தும் நோக்கில் விரைவில் ஆன்மிக மாநாடு திண்டுக்கல்லில் நடக்க இருக்கிறது'' என்றார்.






      Dinamalar
      Follow us