ADDED : பிப் 22, 2026 07:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ''மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 2.5 சதவீதம் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும்.'', என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றக் கோரி தமிழக அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் கூட்டமைப்பு சார்பில், திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் வேளாங்கண்ணி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பத்மநாபன், அருள்செல்வம் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் மேரி பிரிட்டில் பாய், மாவட்ட இணைச் செயலர் மசபியேல் ஆசி பேசினர். இதில் நிர்வாகிகள் சகாயராஜ், மரிய இஞ்ஞாசி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

