/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மனைவி தற்கொலை வேதனையில் கணவரும் இறப்பு
/
மனைவி தற்கொலை வேதனையில் கணவரும் இறப்பு
ADDED : செப் 29, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை, : நிலக்கோட்டை அருகே மனைவி தற்கொலை செய்த வேதனையில் அன்று இரவே கணவரும் இறந்தார். சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி 47. கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள் 45. இவர்களுக்கு லதா 24, அழகுச்செல்வி 18, இந்திரா 16, என 3 மகள்கள், ராமகிருஷ்ணன் 22 ,என ஒரு மகன் உள்ளனர்.
நேற்று முன் தினம் குடும்ப பிரச்னையில் பாண்டியம்மாள் பூச்சி மருந்து குடித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இதை அறிந்த பாண்டி அன்று இரவே மன வேதனையில் இறந்தார். இதனிடையே நேற்று பாண்டியம்மாள் இறந்தார்.