sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழனி கோவில் கருவறையில் சிலை; பாதுகாப்பு குழு ஆய்வு

/

பழனி கோவில் கருவறையில் சிலை; பாதுகாப்பு குழு ஆய்வு

பழனி கோவில் கருவறையில் சிலை; பாதுகாப்பு குழு ஆய்வு

பழனி கோவில் கருவறையில் சிலை; பாதுகாப்பு குழு ஆய்வு


ADDED : டிச 04, 2024 11:44 PM

Google News

ADDED : டிச 04, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி : பழனி முருகன் கோவில் மூலவர் சிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் போகர் சித்தரால் நவபாஷாணத்தில் வடிவமைக்கப்பட்டது.

இச்சிலையை பாதுகாப்பது குறித்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் நவபாஷாண சிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர்.

இந்த குழுவின் தலைவர் பொங்கியப்பன், குன்றக்குடி, பேரூர், சரவணம்பட்டி ஆதீனங்கள், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், பழனி கோவில் முன்னாள் இணை கமிஷனர் நடராஜன், ஐ.ஐ.டி., பேராசிரியர் முருகையா தலைமையிலான குழுவினர் நேற்று கோவிலுக்கு வந்தனர். அப்போது பிரம்மசுத்தி யாகம் நடந்தது.

அதன்பின் குழுவினர் நவபாஷாண சிலையை ஆய்வு செய்தனர்.

பொங்கியப்பன் கூறுகையில், ''பழனி மூலவர் சிலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஸ்திரத்தன்மையுடன் இருக்கும். ஐ.ஐ.டி., குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பர்,'' என்றார்.

குழுவினர் ஆய்வு காரணமாக, காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. 3 மணி நேரம் பக்தர்கள் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us