/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிகாரிகள் மெத்தனத்தால் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு
/
அதிகாரிகள் மெத்தனத்தால் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு
அதிகாரிகள் மெத்தனத்தால் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு
அதிகாரிகள் மெத்தனத்தால் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு
ADDED : டிச 30, 2024 11:59 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுதும் கிராமங்களாக இருப்பதால், மக்கள் அதிகம் விவசாய தொழில்களில் ஈடுபடுகின்றனர். கொடைக்கானல், சிறுமலை சுற்றியுள்ள பகுதிகளில் மலை கிராமங்கள் உள்ளதால், அங்குள்ளவர்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால், பக்கத்து இடங்களுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். அவர்களில் சிலர் வருமானம் கிடைக்கிறது என்பதற்காக, பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகளை தங்களுடன் வேலைக்கு அழைத்து செல்கின்றனர்.
சில குடும்பங்களில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை நேரத்தில், குடும்ப சூழ்நிலைகளை கருதி தங்கள் குழந்தைகளை பெட்ரோல் பங்க், பெயின்ட் அடிப்பது, கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைக்கு அனுப்புகின்றனர்.
இதை கண்காணிக்க வேண்டிய தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இதனால், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மாவட்டம் முழுதும் அதிகரித்து உள்ளது.
தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்ட நிலையில், கட்டட தொழில், பெயின்ட் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு கூலி வேலையில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.
இவர்கள் பணத்தை பார்த்ததும் மனம் மாறி, விடுமுறை முடிந்தும் பள்ளிகளுக்கு செல்லாமல் இடைநின்று வாழ்வை தொலைக்கும் அவலம் தொடர்கிறது.
மாவட்ட கல்வி அதிகாரிகளும், இடை நின்ற மாணவர்கள் பிரச்னைகள் குறித்து முறையாக விசாரிப்பதில்லை.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள், குழந்தை தொழிலாளர்களை வேலைகளுக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெற்றோருக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.