/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பீன்ஸ் விலை அதிகரிப்பு கிலோ ரூ. 50க்கு விற்பனை
/
பீன்ஸ் விலை அதிகரிப்பு கிலோ ரூ. 50க்கு விற்பனை
ADDED : அக் 12, 2024 01:18 AM

ஒட்டன்சத்திரம்,:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீன்ஸ் விலை அதிகரித்து கிலோ ரூ.50 க்கு விற்றது.
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி வடகாடு, கண்ணனுார், கோம்பைபட்டி, பெத்தேல்புரம் சுற்றிய கிராம பகுதிகளில் பீன்ஸ் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
இம்மாதம் துவக்கத்தில் பல இடங்களில் அறுவடை மும்முரமாக இருந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து கிலோ ரூ.30க்கு விற்பனை ஆனது. சில நாட்களாக விளைச்சல் குறைய வரத்து குறையத் தொடங்கியது.
இதன் காரணமாக பீன்ஸ் விலை அதிகரித்து கிலோ ரூ.50 க்கு விற்பனை ஆனது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வியாபாரி ஒருவர் கூறுகையில் ' வரும் நாட்களில் இன்னும் வரத்து குறையும் என்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என்றார்.