ADDED : பிப் 16, 2026 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிக பக்தர்களின் கூட்டம் இருந்தது. இக்கோயிலுக்கு ஏராளமான வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் விடுமுறை தினத்தை முன்னிட்டு வருகை புரிந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார், வின்ச்சில் பல மணி நேரம் காத்திருந்தனர்.
கோயிலில் பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மாலை நேரத்தில் ஈரோடு, சேலம் செல்லும் பக்தர்கள் அதிக அளவில் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர்.

