sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அதிகரிப்பு ... சரக்கு வாகனங்களில் பயணிக்கும் அவலம்: போலீஸ் நடவடிக்கை இல்லாததால் ஜோர்

/

அதிகரிப்பு ... சரக்கு வாகனங்களில் பயணிக்கும் அவலம்: போலீஸ் நடவடிக்கை இல்லாததால் ஜோர்

அதிகரிப்பு ... சரக்கு வாகனங்களில் பயணிக்கும் அவலம்: போலீஸ் நடவடிக்கை இல்லாததால் ஜோர்

அதிகரிப்பு ... சரக்கு வாகனங்களில் பயணிக்கும் அவலம்: போலீஸ் நடவடிக்கை இல்லாததால் ஜோர்


ADDED : ஆக 16, 2025 02:43 AM

Google News

ADDED : ஆக 16, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் மனிதர்கள் பயணிக்க டூவீலர்கள், ஆட்டோக்கள், கார்கள், பஸ்கள், ரயில்கள் என பல வகையான போக்குவரத்து வாகனங்கள் இருந்தபோதிலும் சரக்கு வாகனங்களில் பயணிப்பது தொடர்கிறது. பொதுமக்களும் பஸ் இல்லாத நேரங்கள்,பஸ் போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு சரக்கு வாகனங்களில் பயணிக்கின்றனர்.

மேலும் திருமணம், காதணி விழா உள்ளிட்ட விழா, அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்க, அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்பதற்கும், துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் அதிக அளவில் சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆபத்து நிறைந்த பயணம் என்பதை அறிந்தும் பலர் சரக்கு வாகனத்தில் அச்சமின்றி பயணிக்கின்றனர். சரக்கு வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது இவர்களில் பலர் உயிரை இழப்பதும் காயம் அடைவதும் ஏற்படுகிறது.

போக்குவரத்து போலீசார் இத்தகைய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன் நின்று விடாமல் அடுத்தடுத்து இதுபோல் நடந்தால் பறிமுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடமும் சரக்கு வாகனங்களில் செல்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us